November 30, 2008

எறிகணைகளுக்கு எதிராக வார்த்தைகளை எறிதல் - செல்மா பிரியதர்ஸன்

எறிகணைகளுக்கு எதிராக வார்த்தைகளை எறிதல்.

இது இறுதிப் போர் என்று அறிவித்து சிங்கள ராஜபக்சே அரசு ஏவுகணைகளையும் எறிகுண்டுகளையும் ஈழத் தமிழர்களின் குடியிருப்பின் மேல் உடமைகள் மேல் வாழ்வாதாரங்களின் மேல் எறிந்து வருகிறது. இலங்கையின வரைபடத்திலிருந்து தமிழர்களை துடைத்து எறியும் இறுதி நடவடிக்கையாக சிங்கள அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. உயிர் பிழைத்திருக்க முப்பது ஆண்டுகளாக அத்தீவைவிட்டு வெளியேறி உலகம் முழுவதும் அகதிகளாக வாழ்ந்து வருகிறது ஈழத் தமிழனம.; கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்கள் குடியிருப்புகளைவிட்டு வெளியேறி வனாத்திரங்களில் முகாம்கள் அமைத்து பசியிலும் நோயிலும் பிழைத்து வருகிறார்கள். உணவுப் பொட்டலங்களுக்குப் பதிலாக அணுகுண்டுகளை விட மோசமான உயிர்க்காற்றை ( ஆக்ஸிஜனை) உறிஞ்சுகிற உக்கிர குண்டுகளை அவர்களுக்கு உணவாக வழங்குகிறது ராஜ பக்சே அரசு. எப்போதும் போல் தமிழ்ப் பெண்களின் உடல்கள் மேலும் நீட்டிக்கப்படும் போரின் செயல்பாடுகள். சிங்கள அரசிற்கு பொருளாதார இராணுவ உதவிகளைச் செய்துவரும் நம் இந்திய அரசோ இந்தியாவிற்கு (தமிழகத்திற்குள்) வரும் போர் அகதிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி தனது சொந்தப் பொறுப்பில் பராமரிக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்துகிறது.

மத்திய அரசில் அதிகாரத்தினை பங்கு போட்டிருக்கும் தமிழ் மாநில அரசியல் கட்சிகளோ அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் மீது விறைத்த பற்றுடன் செயலாற்றி வருகிறது.

தமிழ் மொழியில் கவிதைகள் எழுதிவரும் நாங்கள் நிலவிவரும் சூழல்களையும் நிலவரங்களையும் அறிந்திருக்கிறோம். ஒரு சமூகத்தில் மொழியில் இயங்கும் கவிஞர் என்பவரின் வரம்புகளையும் சாத்தியங்களையும் உணர்ந்தே இருக்கிறோம். அழிந்து வரும் அரிய உயிரினத்தின் மாதிரிகள் போல நாம் வாழும் காலத்தில் ஈழத் தமிழினம் கண்களின் முன்னால் அழிந்து வருவதைக் காணச் சகியோம் எங்களிடம் அதிகாரம் இல்லை ஆயுதங்கள் இல்லை ஆட்சி இல்லை. வார்த்தைகள் மட்டுமே உள்ளது சிங்கள அரசின் தமிழ் ரத்தம் பருகும் இராணுவ வெறிமீது ஏவுகணைகள் போல் வார்த்தைகளை வீசுவோம். தமிழனத்தின் விடுதலைமீது வாழ்வுமீது பாரா முகமாய் இருக்கும் தமிழக அரசியல் மௌனத்தின் மீது தற்கொலைபோல் வார்த்தைகளாய் விழுவோம். தேசம் என்று நம்பி வாழும் இந்தியப் பாராளுமன்றத்தின் மனசாட்சியை நோக்கி மரணம் போல வார்த்தைகளை எறிவோம், கண்ணீர் சிந்துவோம், ஒப்பாரி வைப்போம், தூற்றுவோம் சாபமிடுவோம்.

தமிழகத்தில் கவிஞர்கள் பல்வேறு குழுக்களாக, வேறுபாடுகள் உடையவர்களாக இருந்து வந்த போதிலும் எல்லா வித்தியாசங்களையும் கடந்து சென்னை மெரினா கடற்கரையில் டிசம்பர் 7-ல் ஒன்று சேர்கிறோம். தமிழகம் முழுவதுமிருந்து கவிஞர்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் சொந்த தார்மீகத்தில் கடற்கரை நோக்கிப் பயணிக்கிறோம்.

தமிழ்க் கவிஞர்களின் கண்டனக் கவிதைப் போராட்டத்திற்கு தமிழகத்திலுள்ள அனைத்து எழுத்தாளர்களையும், கலைஞர்களையும், மாணவர்களையும், பொதுமக்களையும் அழைக்கிறோம்.

செல்மா பிரியதர்ஸன்

கண்டன கவிதைப் போராட்டத்திற்கான வெளிச்சத்தின் ஆதரவு

தமிழக கவிஞர்களுக்கு வெளிச்சம் நன்றி தெரிவிக்கின்றது. எங்கிருந்தாலும் நீங்கள் ஈழத்தமிழர்களின் தொப்பூள்கொடி


தமிழக கவிஞர்கள் எழுகிறார்கள்! ஈழத்தமிழர்களுக்காக கண்டன கவிதைப்போராட்டம்!
ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றுமாறு கோரி தமிழகத்தின் கவிஞர்கள் ஒன்று திரண்டு கண்டனக்கவிதைப்போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தயாராகி வருகின்றார்கள்.

எதிர்வரும் டிசம்பர் 7 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலையருகே இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறியப்படுகின்றது.

சுமார் 150 க்கும் அதிகமான கவிஞர்கள் ஒன்று கூடி ஈழத்தமிழர்கள் இன்று பட்டு வரும் அவலங்களை தங்களது கவிதைகளாக பதிவு செய்யவுள்ளனர்.

இந்த கண்டனக்கவிதைப்போராட்டத்தில் கவிஞர்கள் தவிர்ந்த ஆயிரக்கணக்கான
பொது மக்களும் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்
என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈழத்தமிழ்களுக்கு ஏதிரான வன்கொடுமைகளையும், அநீதிகளையும் கண்டிப்பதே இந்த போராட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்தியை அனைத்து தமிழ் ஊடகங்களும் வெளியிட்டு ஈழத்தமிழர்களுக்காக தமிழக கவிஞர்கள் நடத்தும் உணர்வுப்போராட்டத்தை உலகறியச்செய்யுங்கள்!

தொடர்புகளுக்கு

9841043438, 9884120284, 9952089604
tamilpoets@gmail.com
www. tamilpoets.blogspot.com


உறவுகள் அல்லவா?.உங்களது போராட்டம் வித்தியாசமானது. வரவேற்கின்றோம். தொடரட்டும் உங்கள் போராட்ட உணர்வு.

உங்கள் போராட்டத்தை ஈழத்தமிழர்கள் மத்தியில்

பரப்புரை செய்யும் வகையில் வெளிச்சம் செய்திகளை வெளியிட காத்திருக்கிறது. தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் உங்களது வித்தியாசமான கண்டனக்விதைப்போராட்டம் குறித்த செய்திகளை வெளிச்சம் வெளியிட்டிருக்கின்றது.

உங்கள் போராட்டம் வெற்றி பெற வெளிச்சம் வாழ்த்துகின்றது.

நிர்வாகக்குழு
வெளிச்சம்.
velichcham com

November 24, 2008

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராய் ஒப்பாரி இயக்கம்

தொடர்ந்து வன்கொடுமைகளுக்கு இலக்காகிவரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இன அநீதிகளைக் கண்டித்து ,
தமிழ்க் கவிஞர்கள் ஒருங்கிணைந்து நடத்தும்

கண்டனக் கவிதைப் போராட்டம்.

இடம் :
சென்னை மெரீனா கடற்கரையில்,
காந்தி சிலையருகே

நாள் : டிசம்பர் - 7, 2008ம்,ஞாயிற்றுக்கிழமை

நேரம் :
காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை


நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் ஒன்றுகூடி,
இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளை எதிர்த்து
தங்கள் கவிதைகளைப் பதிவு செய்யவிருக்கின்றனர்.

அனைவரும் கலந்துகொண்டு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள்.

சேர்ந்து குரல் கொடுப்போம்.இன அழிவுப்படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோருவோம் !

தொடர்புக்கு

மின்னஞ்சல் : tamilpoets@gmail.com

செல்பேசி : 9841043438, 9884120284, 9952089604

இவண் தமிழ்க் கவிஞர்கள்