றஞ்சினி --- ஓர் கடிதம்....ஈழத்தில் நடந்துகொண்டிருக்கும் போர் உக்கிரமடைந்துகொண்டிருக்கிறது ,போர் நிற்பதற்க்கான எந்த அழுத்தங்களும் நிகழ்வுகளும் அங்கு காணப்படவில்லை போர் உச்சமடைந்துகொண்டிருப்பதைத்தவிர.. .. இறந்துகொண்டிருக்கும் மக்கள், அனாதரவாக விடப்பட்டமக்கள் .இந்தக்கொடுமைகளுக்குள் இயற்க்கையிடமும் சிக்கித்தவிக்கும் மக்களின் நிலை ..இழப்புக்கழும் ,அழிவுகள் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் தமிழகத்தில் மக்கள் , கலைஞ்ஞர்கள் , எழுத்தாளர்கள் , தமது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டிருப்பது நாம் அங்கு இல்லாவிட்டாலும் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற ஒரு சந்தோசத்தை நம்பிக்கையைக்கொடுக்கிறது. உங்களுடன் சேர்ந்து எம் உணர்வுகளையும் தோழமையும் இத்துடன் தெரிவிக்கிறேன்... மெரினா கடற்க்கரையில் நடக்கும் இந்த ஒப்பாரி கவிதை நிகழ்வு ஈழத்தமிழர்களுடன் இலங்கை அரசால் நீண்ட வருடங்களாக தொடர்ந்து கொல்லப்படும், துன்புறுத்தப்படும் மீனவ தோழர்களுக்கான ஒப்பாரியாகவும் இருக்கிறது இதில்பங்குபெறும் அனைத்து எழுதாள கவிதாயினிகள் ,கவிஞ்ஞர்கள், நண்பர்களுக்கும் மற்றும் அனைத்துமக்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்கழும்
தோழமையும்..
றஞ்சினி.
Showing posts with label றஞ்சினி --- ஓர் கடிதம். Show all posts
Showing posts with label றஞ்சினி --- ஓர் கடிதம். Show all posts
December 8, 2008
Subscribe to:
Posts (Atom)
