November 30, 2008

கண்டன கவிதைப் போராட்டத்திற்கான வெளிச்சத்தின் ஆதரவு

தமிழக கவிஞர்களுக்கு வெளிச்சம் நன்றி தெரிவிக்கின்றது. எங்கிருந்தாலும் நீங்கள் ஈழத்தமிழர்களின் தொப்பூள்கொடி


தமிழக கவிஞர்கள் எழுகிறார்கள்! ஈழத்தமிழர்களுக்காக கண்டன கவிதைப்போராட்டம்!
ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றுமாறு கோரி தமிழகத்தின் கவிஞர்கள் ஒன்று திரண்டு கண்டனக்கவிதைப்போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தயாராகி வருகின்றார்கள்.

எதிர்வரும் டிசம்பர் 7 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலையருகே இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறியப்படுகின்றது.

சுமார் 150 க்கும் அதிகமான கவிஞர்கள் ஒன்று கூடி ஈழத்தமிழர்கள் இன்று பட்டு வரும் அவலங்களை தங்களது கவிதைகளாக பதிவு செய்யவுள்ளனர்.

இந்த கண்டனக்கவிதைப்போராட்டத்தில் கவிஞர்கள் தவிர்ந்த ஆயிரக்கணக்கான
பொது மக்களும் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்
என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈழத்தமிழ்களுக்கு ஏதிரான வன்கொடுமைகளையும், அநீதிகளையும் கண்டிப்பதே இந்த போராட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்தியை அனைத்து தமிழ் ஊடகங்களும் வெளியிட்டு ஈழத்தமிழர்களுக்காக தமிழக கவிஞர்கள் நடத்தும் உணர்வுப்போராட்டத்தை உலகறியச்செய்யுங்கள்!

தொடர்புகளுக்கு

9841043438, 9884120284, 9952089604
tamilpoets@gmail.com
www. tamilpoets.blogspot.com


உறவுகள் அல்லவா?.உங்களது போராட்டம் வித்தியாசமானது. வரவேற்கின்றோம். தொடரட்டும் உங்கள் போராட்ட உணர்வு.

உங்கள் போராட்டத்தை ஈழத்தமிழர்கள் மத்தியில்

பரப்புரை செய்யும் வகையில் வெளிச்சம் செய்திகளை வெளியிட காத்திருக்கிறது. தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் உங்களது வித்தியாசமான கண்டனக்விதைப்போராட்டம் குறித்த செய்திகளை வெளிச்சம் வெளியிட்டிருக்கின்றது.

உங்கள் போராட்டம் வெற்றி பெற வெளிச்சம் வாழ்த்துகின்றது.

நிர்வாகக்குழு
வெளிச்சம்.
velichcham com

No comments: